Site icon Tamil News

இலங்கை வந்தடைந்த ஜப்பானிய நிதியமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் வரவேற்றார்.

2024 ஜனவரி 11 முதல் 12 வரை ஷுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

 

Exit mobile version