அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று லங்கா மின்சார (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் (லெகோ) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது 08 செப்டம்பர் 2023 முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அடுத்த மாதம் (ஒக்டோபர்) மாதம் முதல் அறவிடப்படும் மின் கட்டணத்தில் இந்த புதிய வரியும் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி லெகோ கம்பனியானது மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானித்துள்ளது.