Site icon Tamil News

ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும்,  பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

நாட்டில் அண்மையில் சுகாதாரத்துறையில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் உயிரிழப்புகள்இ போலி மருந்து பயன்பாடு ஆகிவற்றுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என அழுத்தும் பிரயோகிக்கப்பட்டது.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளது.

Exit mobile version