Site icon Tamil News

வைரலாகும் இத்தாலி பிரதமரின் செல்ஃபி

இத்தாலி பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்த போது எடுத்த செல்ஃபி தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது ஸ்மைலி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

“Good friends at COP28.” என்ற தலைப்பில் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மற்றும் ”melodi” என்ற ஹேஷ்டேக்கை சமூக ஊடகப் பயனர்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டுத் தலைவர்களை ஒன்றாகப் பார்ப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பசுமை காலநிலை நிதியத்தை ஆதரிப்பதில் இத்தாலி உறுதியுடன் இருப்பதாகவும், “புதிய இழப்பு மற்றும் சேத நிதிக்கு 100 மில்லியன் யூரோக்கள்” பங்களிப்பதாகவும் இத்தாலிய பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.

 

Exit mobile version