Site icon Tamil News

காசாவில் இணைய சேவைகள் வழமைக்கு திரும்பின!

காசா பகுதியில் உடைந்த தொலைபேசிகள், இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தகவல் தொடர்பு அமைப்பில் கோளாறு ஏற்பட்டது, இதன் காரணமாக இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள் வெளியுலக உறவுகளை இழந்திருந்தனர்.

எவ்வாறாயினும், காஸா பகுதியின் பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு சபை நாளை (30.10) மீண்டும் கூடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version