Site icon Tamil News

காஸா எல்லையில் மீண்டும் கட்டுப்பாட்டை நிறுவிய இஸ்ரேல்!

காஸா எல்லையில் மீண்டும் கட்டுப்பாட்டை நிறுவியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அதேபோல் ஹமாஸ் போராளிகள் சில பகுதிகளில் கண்ணிவெடிகளை நட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் சமீபத்திய சுற்று வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில்,  இஸ்ரேரால் சிறைப்பிடிக்கப்பட்ட ஒருவரை முன்னறிவிப்பின்றி தூக்கிலிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  இஸ்ரேலிய இராணுவம் முன்னோடியில்லாத வகையில் 300,000 பாதுகாப்புப் படையினரை வரவழைத்து, காஸா பகுதியில் முற்றுகையிட்டுள்ளது.

இந்த மோதல் நடவடிக்கையால் இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு மத்தியில் மோதலின் தீவிரம் ஏராளமான உயிரிழப்புகளை கொண்டுவரும் என்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version