Site icon Tamil News

இந்திய மீனவர்களின் அராஜக செயலால் அச்சத்தில் யாழ் மீனவர்கள்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (21)மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது கரைக்கு அண்மையாக வந்த இந்தியன் இழுவைமடி படகுகள் அவர்களுடைய பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இந்தியன் இழுவைமடி படகுகளை விரட்ட முனைந்தும் பாதுகாப்பற்ற காரணங்களால் அறுந்த மிகுதி வலைகளுடன் உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளனர்த.

இரண்டு படகுகளுக்கு சொந்தமான வலைகள் எதுவும் மிஞ்சாததால் குறித்த இரண்டு படகுகளும் எந்தவொரு வலைகளும் இல்லாமல் வெறுமனே கரைக்கு திரும்பியதை காணக்கூடியதாக இருந்தது.

மிகுதி இரண்டு மீனவர்கள் சொற்ப வலைகளுடன் அவர்களும் கரைக்கு திரும்பி வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் சம்பவம் குறித்து முறையிட்டுள்ளனர்.

Exit mobile version