Site icon Tamil News

வேட்பு மனுக்களை இரத்து செய்ய தீர்மானம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், 1000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற முடிவுகளை எடுப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? தற்போது தேர்தல் நடைபெறவில்லை என்றாலும், உள்ளாட்சித் தேர்தல் ஒரு கட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் உட்பட, இலங்கை தேர்தல் ஆணையம் ஏற்கனவே பெரும் தொகையை செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை  தேர்தல்கள் பிற்போடப்பட்டமையினால் வேட்புமனுக்களை சமர்ப்பித்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version