Tamil News

இலங்கையில் கடுமையாகும் தண்டனை! தண்டப்பணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்திற் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் நலம் மற்றும் மன நிலையை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

அதனை பாா்வையிடுவதற்காக வந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தொிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் தவிர, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர்களின் உடல்நலம் மற்றும் மன நிலையை அளவிடுவதற்கான அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

அபராதத் தொகையை மேலும் அதிகரிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version