Site icon Tamil News

இலங்கையில் மீண்டும் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!

தற்போது இலங்கையின் சுகாதார அமைப்பில் 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று (08.08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுகாதார அமைச்சு 862 அத்தியாவசிய மருந்துகளை இனங்கண்டுள்ளதாகவும் கடந்த வருடம் 250 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேசிய மட்டத்தில் 52 மருந்துகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த 52 மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் நாட்டில் இருப்பதாகவும், இவற்றில் சில மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டு, ஆர்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் மருத்துவமனைகளில் உள்ளதாகவும், மருந்து தட்டுப்பாடு அணுவளவும் குறையும் என்பதால், வரும் காலங்களில் மருந்து தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version