Site icon Tamil News

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த விபத்து

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் 19 அன்றைய தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் நகுலேஸ்வரன் 47 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 23 திகதி வரை விளக்மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலம் யாழ் போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version