Site icon Tamil News

இலங்கையில் 25 இலட்சம் குடும்பங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!

குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாதம் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நமது நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இருப்பதாக அரசு எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கினோம்.

அதேபோல், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கணக்கிட்டு, 20 கிலோ அரிசியை வெளிப்படையாக வழங்குவோம். இதேவேளை, அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Exit mobile version