Site icon Tamil News

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13.11) நண்பகல் 12 மணிக்கு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்போது  அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி சம்பள உயர்வை விருப்பப்படி செய்ய முடியாது என்றும் வரி வருவாயில் 35% அரசாங்க சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version