Site icon Tamil News

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள்

தம்புள்ளை குருநாகல் பிரதான வீதியின் கலேவெல தலகிரியாகம பிரதேசத்தில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.

கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பொலிஸ் எல்லைக்குட்பட்ட எதபெதிவெவ பகுதியைச் சேர்ந்த சந்திமா ஜும்னி தில்ருக்ஷி என்ற 25 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கலேவெல பிரதேசத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி டிப்பர் ரக வாகனம் சென்று கொண்டிருந்த போது தலகிரியாகம ஆலயத்திற்கு அருகில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version