Site icon Tamil News

சிங்கப்பூரில் ஹோட்டல்களுக்கு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்

சிங்கப்பூரில் ஹோட்டலில் குவளையைவிட்டுச் சென்றவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேக்கா சந்தை, உணவங்காடி நிலையத்தில் பானத்தை அருந்திவிட்டு சென்றவருக்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு அந்த விவரத்தைத் தந்தது. Khuranasahib என்பவர் TikTokஇல் கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட காணொளியின் தொடர்பில் சுற்றுப்புற அமைப்பு Facebookஇல் அறிக்கை வெளியிட்டது.

தேக்கா சந்தையில் ஒருவர் மேசையை யார் சுத்தம் செய்ய வேண்டும் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது காணொளியில் பதிவாகியிருக்கிறது.

2 அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்பிலான அறிக்கையில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு மேசைகளைச் சுத்தமாக வைத்திருக்கும் இயக்கத்தை ஆதரிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

மேசைகளைத் துடைப்பதற்குத் தேவையில்லை என்றாலும் மேசைகளின் மீது அல்லது அவற்றைச் சுற்றிக் குப்பை எதனையும் விட்டுச்செல்லக் கூடாது என்று அமைப்பு கூறியது.

Exit mobile version