Site icon Tamil News

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அமுலாகும் தடை

பிரான்ஸில் மேற்குப் பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மே 10ஆம் திகதியன்று அங்குள்ள வறட்சி நெருக்கடிநிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என்று பிரான்ஸின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார்.

கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல் குளத்தை நிரப்புதல் ஆகியவையும் தடை செய்யப்படும் என கூறப்படுகின்றது.

இத்தகைய தண்ணீர் நெருக்கடி நிலை ஏற்படும்போது நீரைக் குடிப்பதற்கு மட்டும் உபயோகிப்பது சிறந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள வளங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version