1.5 மில்லியன் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமடிங்க தெரிவித்தார்.
உதவி தேவைப்படும் இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உள்ளது என்றார்.
இதன்படி முதற்கட்டமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.
இதற்கிடையில், வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து விசாரணைகளையும் அஸ்வெசும அவசர தொலைபேசி எண் 1924 க்கு தெரிவிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.