Site icon Tamil News

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்!

1.5 மில்லியன் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமடிங்க தெரிவித்தார்.

உதவி தேவைப்படும் இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உள்ளது என்றார்.

இதன்படி முதற்கட்டமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.

இதற்கிடையில், வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து விசாரணைகளையும் அஸ்வெசும அவசர தொலைபேசி எண் 1924 க்கு தெரிவிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Exit mobile version