Site icon Tamil News

பிரான்ஸில் குழு மோதலால் சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் 16 வயதுடைய தோமஸ் (Thomas) எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபடும் போது கத்திக்குத்துக்கு இலக்காகி அவர் உயிரிழந்துள்ளார்.

Drôme மாவட்டத்தில் உள்ள Crépol எனும் சிறிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 16 தொடக்கம் 20 வயதுக்குட்ட சிலர் குழு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதன் முடிவில் குறித்த 16 வயதுச் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதலில் தோமஸ் உயிரிழந்தான்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் ஏழு பேரை கைது செய்தனர். மேலும் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது 20 வயதுடைய ஒருவன் என தெரிவந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version