Site icon Tamil News

ஜெர்மனியில் பெண் மருத்துவருக்கு ஒருவருக்கு மர்ம நபரால் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் பெண் மருத்துவர் ஒருவர் மர்ம நபரால் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் குறிப்பாக கொலோன் பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

குறித்த பெண் மருத்துவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு கடத்தியவர்கள் ஒரு வீட்டில் குறித்த பெண்ணை ஒரு நாள் அடைத்ததாகவும், பின்னர் அவரை விடுதலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒரு நபர் குறித்த வைத்தியரின் நோயாளியாக சிகிச்சை பெற்றவர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 39 மற்றும் 53 வயதுடைய 2 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்பொழுது அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version