கிழக்கு உக்ரேனிய நகரமான லைமன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கைரிலென்கோ, ரஷ்யப் படைகள் கடந்த ஆண்டு உக்ரைன் படைகளால் மீட்கப்பட்ட நகரத்தை ராக்கெட்டுகளால் தாக்கியதாக முன்னதாக அறிவித்தார்.
இந்த தாக்குதல் வேண்டுமென்றே குடியிருப்புத் தொகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.