Site icon Tamil News

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி!

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தின் இறுதியிலும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version