Tamil News

தி கோட் படத்தின் கதை இதுதான் – ரசிகர்களுக்கு திருவிழாதான்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையயில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு தெரிவிக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

இந்த நிலையில், தி கோட் படத்தின் கதை என்பது கற்பனைக் கதைதான் என்றாலும் உண்மைக்கு நெருக்கமாக இந்த கதையை படமாக்கி இருக்கின்றோம். RAW அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் குழுவின் பெயர் SATS. இந்த குழுவுல இருந்த அனைவரும் ஒரு காலத்துல மிகவும் துணிச்சலாக செய்த செயல் ஒன்று இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக அவர்களுக்கு எதிராக மாறி நிற்கின்றது.

இந்த பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்கின்றார்கள் என்பதுதான் படத்தின் மைய்யக்கதை. படம் முழுக்க ஆக்‌ஷன்தான். தளபதி விஜய் ரசிகர்கள், தளபதியை எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்தார்களோ அவை அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும்.

ரசிகர்களுக்கு படத்தில் பல சஷ்பன்ஸ் காத்திருக்கு. படத்துக்குள்ள வந்துட்டாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version