Tamil News

இலங்கையில் அதகலம் பண்ணும் கோட் படக்குழுவினர்…

நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார்.

இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள சூழலில் முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோட் படக்குழுவினர் இலங்கையில் அடுத்த கட்ட சூட்டிங்கில் உள்ளனர். ஆனால் இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை. இலங்கை ஹார்பரில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக போகம்பரா சிறைச்சாலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்தடுத்த பகுதிகளில் இன்னும் ஏழு நாட்கள் கோட் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version