Site icon Tamil News

இலங்கையில் விலை குறைப்பில் மோசடி – நாடு முழுவதும் சுற்றிவளைப்பு

இலங்கையில் மின் கட்டணம், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை குறைப்பின் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரி.ஐ உடுவர இதனைத் தெரிவித்துள்ளார்

மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version