Site icon Tamil News

மெத்தனால் சப்ளை செய்த ஐந்து பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் விச சாராயம் குடித்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விச சாராயத்தை குடித்ததால் இறந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி(45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ்(27), மணிமாறன்(27), கதிர்(27), உத்தமன்(31), ஆகிய ஐந்து பேரை செங்கல்பட்டு மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் அந்த நிறுவனத்தில் சிறிதளவு மெத்தனால் இருந்ததையடுத்து சோதனைக்கு அதனை எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version