Site icon Tamil News

கப்பலுடன் மோதி மீன்பிடி படகு விபத்து: 3 மீனவர்களுக்கு நேர்ந்த கதி

காலி மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் கப்பலொன்றுடன் மோதி மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட மேலும் 4 மீனவர்கள் நெடுநாள் மீன்பிடி படகொன்றின் மூலம் கரைக்கு அழைத்துவரப்படுவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி 7 மீனவர்களுடன் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்த நிஹதமாணி – 1 என்ற நெடுநாள் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Exit mobile version