Site icon Tamil News

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடும் தகவல் அம்பலம்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் தொழில் அம்பலமாகியுள்ளது.

மொரட்டுவ பிரதேசத்தில் நடமாடும் விபச்சார வியாபாரத்தை நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர் விசாரணையியன் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பெண் ஒருவருக்கு மணித்தியாலயத்திற்கு 55,000 ரூபா வீதம் அறவிடுவதாகவும், பெண்கள் அலுவலகங்களில் பணிபுரிவதால் இரண்டு மணிநேரம் குறுகிய விடுப்பில் வருவதாகவும் கடத்தல்காரர் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பணம் உறுதி செய்யப்பட்டு, பரிவர்த்தனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, பெண்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன், அவர்கள் இரண்டு மணி நேர குறுகிய விடுப்பு எடுத்து அலுவலகத்திலிருந்து வெளியே வந்து, அதன் பிறகு அவர்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டதாக கடத்தல்காரர் வெளிப்படுத்தியுள்ளார்.

அலுவலகத்தில் இருந்து பெறும் சம்பளம் போதாததால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க இந்த பெண்கள் தூண்டப்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version