Site icon Tamil News

இஸ்ரேலின் விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

இஸ்ரேலின் விவசாயத் துறையில் சுமார் ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை இந்தப் பணிகளில் அமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக ஆராயும் என வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன முரண்பாடு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நாணயக்கார இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தனது உரையின் போது, இஸ்ரேலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது.

இஸரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் அமைச்சர் அடிக்கோடிட்டுக் கூறினார்.

Exit mobile version