Site icon Tamil News

வேறு வீடு கேட்கும் கோட்டாபய ராஜபக்ச

தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தற்போது கொழும்பு, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார்.

அதற்கு பதிலாக, அவர் ஸ்டான்மோர் வீதியில் அமைந்துள்ள ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கேட்டுள்ளார்.

தற்போதுள்ள குடியிருப்புகளை சுற்றி அடிக்கடி சத்தம் கேட்கும் என்பதால், அந்த குடியிருப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Exit mobile version