Site icon Tamil News

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்: மைத்திரிபாலவிடம் இருந்து வாக்குமூலம் பதிவு

சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறினார்.

கண்டியில் அவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில் தெரிவித்திருந்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version