Site icon Tamil News

அனுராதபுரம் விபத்து தொடர்பில் சாரதி கைது!

அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான கெப் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விபத்தில்  மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, வண்டியின் சாரதி அங்கிருந்து தப்பியோடினார், ஆனால் பின்னர் இரண்டு பயணிகளுடன் அனுராதபுரம்-யாழ்ப்பாணம் சந்திப்பில் கைது செய்யப்பட்டார்.

வாகனம் பழுதுபார்க்கும் கடையொன்றின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

18 வயது நிரம்பிய ஓட்டுநருக்கு சரியான ஓட்டுநர் உரிமம் இல்லை என்று கூறப்படுகிறது.

Exit mobile version