Site icon Tamil News

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையில் கைது!

ஸ்பெயின் சுற்றுலா பயணி ஒருவர் செலுத்திய கார் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில், கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து கண்டி நுவரெலியா வீதியில் 474/டி கட்டுகித்துல பகுதியில் நேற்று (23.07) இந்த விபத்து நேர்ந்துள்ளகது.

விபத்துடன் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Exit mobile version