Site icon Tamil News

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவில்,  தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஷ குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது.

Exit mobile version