Site icon Tamil News

இலங்கை அதிகாரிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022 முதல் இலங்கை கடனை செலுத்தத் தவறியிருந்தது. $12 பில்லியன் மதிப்புள்ள பத்திரங்கள் மறுசீரமைக்க முன்மொழியப்பட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறவுள்ள நிலையில், கூடிய விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இரு தரப்பும் இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version