Site icon Tamil News

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

கல்விசாரா ழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, பல்கலைக்கழக அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ள போதிலும், போராட்டம் முடியும் வரை மாணவர் சேர்க்கை தாமதப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் முடிவடைந்தாலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு செய்ய ஒதுக்கீடு ஆணைக்குழு பணியாளர்கள் இல்லாததால், விண்ணப்பங்களை தேர்வு செய்ய கூடுதல் அவகாசம் எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை நிர்ணயிக்கும் இசட் மதிப்பெண்களை வழங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதால் இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் கொஞ்சநஞ்சமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆன்லைனில் ஆய்வுகளை நடத்துகிறார்கள், ஆனால் நடைமுறை சோதனைகள் மற்றும் தேர்வுகளை நடத்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட வேண்டும். வேலை நிறுத்தம் முடியும் வரை மாணவர்களை அழைக்க முடியாது என்பதும் கடுமையான பிரச்னையாக உள்ளது.

மேலும், மாணவர்களின் மஹ்போலா மற்றும் உதவித் தவணைகள் செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் நிருவாகப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான பணம் கூட திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படுவதில்லை என மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி சாரா ஊழியர்களும் கடைசியாக ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளம் பெற்றனர். அன்று முதல் இன்று வரை இவர்களுக்கு சம்பளம் கிடைக்காமல் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இருப்பினும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.

Exit mobile version