Site icon Tamil News

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி துவங்கிய விடைத்தாள் திருத்தும் பணி, 27ம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் நேரடியாக ஈடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்காக கடன் பதிவேடுகளை ஒப்படைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version