Tamil News

ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது…

நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி உள்ளனர். மும்பை மருத்துவமனையில் தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை இன்று பிறந்துள்ளது.

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்து இருந்தார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதன் பின்னர் படங்களில் கமிட் ஆகுவதை தீபிகா குறைத்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தீபிகா படுகோனே தனது பேபி பம்ப் போட்டோ ஷூட்டை நடத்தி இருந்தார். இந்த படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ்கள் குவிந்தன .

இதனைத் தொடர்ந்து மும்பை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோனே அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று பிறந்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று பெண் குழந்தை பிறந்திருப்பது ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் ஆகியுள்ள இந்த நட்சத்திர தம்பதிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version