Tamil News

என்னது இந்த இடுப்பு, தொடைக்கு எல்லாம் சொந்தக்காரி ரம்பா இல்லையா? அடக்கொடுமையே…

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படத்தில் ரம்பாவுக்கு பதிலாக டூப் போட்டு பாடல் காட்சிகளை படமாக்கியதாக அந்த படத்தின் இயக்குநர் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

செல்வ பாரதி இயக்கத்தில் நடிகர் விஜய் நினைத்தேன் வந்தாய் மற்றும் பிரியமானவளே என 2 ஃபீல் குட் மூவிக்களில் நடித்துள்ளார்.

இதில், நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற “வண்ண நிலவே” பாடல் இன்று வரை பல விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகவே உள்ளது.

இந்நிலையில், அந்த பாடலில் பல காட்சிகளில் ரம்பா நடிக்கவே இல்லை என செல்வ பாரதி ஷாக் கொடுத்துள்ளார்.

நினைத்தேன் வந்தாய் படத்தில் கடைசியாகத்தான் அந்த “வண்ண நிலவே” பாடலை படமாக்கினேன். அதற்குள் ரம்பா இன்னொரு படத்தில் கமிட் ஆகி அங்கே நடிக்க போயிட்டா, முதல் பட இயக்குநர் என்பதால், நான் கூப்பிட்டும் அவர் வரவில்லை.

அதனால் எனக்கு ரொம்ப டென்ஷனாகி விட்டது. உடனே ரம்பாவோட டிரெஸ்ஸை மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க என சொல்லிட்டு, அங்கே இருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து தான் அந்த பாடலின் பல காட்சிகளை எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

அதிலும், ஒன்று இரண்டல்ல ஒட்டுமொத்தமாக 45 ஷாட்கள் ரம்பா இல்லாமலே அந்த பாடலை படமாக்கினேன் என்றும் இதுவரை அந்த ரகசியத்தை எங்கேயும் சொல்லவில்லை என இயக்குநர் செல்வ பாரதி சமீபத்திய பேட்டியில் சொல்லி உள்ளார்.

Exit mobile version