Site icon Tamil News

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஒகஸ்ட் மாதத்தில் எட்டமுடியாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 2 இலட்சத்து 2,907 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கடந்த மாத இறுதியில் குறித்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 609 சுற்றுலாப் பயணிகளே கடந்த ஒகஸ்ட் மாதத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Exit mobile version