Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தயாசிறி அறிவிப்பு

கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இலங்கையின் அனைத்து சமூகத்தினராலும் தமக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தான் இணக்கமான நிலையில் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

“எனக்கு எந்த கட்சியுடனும், சமூகத்துடனும் விரோதம் இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கும் நபர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் தேர்தலில் வெற்றி பெறுவேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் இந்த வாரம் (மார்ச் 20) புதிய அரசியல் கூட்டணியும் ஆரம்பிக்கப்பட்டது.

‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் பிரிவு கிட்டத்தட்ட 20 அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களைக் கொண்டுள்ளது.

Exit mobile version