Site icon Tamil News

உக்ரைனில் அணை தகர்ப்பு – நீரில் மிதக்கும் கண்ணிவெடிகளால் அச்சத்தில் மக்கள்

உக்ரைனின் கேர்சன் நகரில் நொவா கவோவ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண்ணிவெடிகள் ஆபத்து உருவாகியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என செஞ்சிலுவை அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார்.

முன்னர் கண்ணிவெடிகள் எங்கு உள்ளன என எங்களிற்கு தெரிந்திருந்தது அணை தகர்ப்பிற்கு பின்னர் அவை எங்குள்ளன என்பது தெரியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஸ்யா கைப்பற்றிய பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலகண்ணிவெடிகள் மிதக்கும் கண்ணிவெடிகளாக மாறியுள்ளன என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவற்றால் பெரும் ஆபத்து ஏற்படலாம், இடிபாடுகளுடன் மோதுண்டால் அவை வெடிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version