Site icon Tamil News

குளிர் காலத்திற்கு தயாராகும் நாடுகள் – அயல் நாடுகளின் உதவியை நாடும் உக்ரைன்

உலகளவில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நிலையில் உக்ரைனில் வெப்பநிலை குறையும் நிலையில் அது எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.

ரஷ்யாவுடனான அதன் போர் தொடர்கிறது. இருக்கும் இடத்தில் சூட்டை அதிகரிக்கவேண்டும் என அதிகமானோர் கோருகின்றனர்.

ஆனால் தேவையைச் சமாளிக்கப் போதிய மின்சாரத்தைத் தன்னால் உற்பத்திசெய்ய முடியாது என்று கீவ் கூறுகிறது. பக்கத்து நாடுகளின் உதவியை அது நாடியுள்ளது.

குளிர்காலத்தில் மின்-ஆலைகள் நாலரை கிகாவாட்ஸ் மின்சக்தியை விநியோக்கும். போருக்கு முந்திய உற்பத்தியில் அது மூன்றில் ஒரு பங்கு என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மின்கட்டமைப்பின் மீது மாஸ்கோ பெரிய தாக்குதல்களை விரைவில் மீண்டும் தொடங்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

அதனால் பிள்ளைகள் உட்பட மில்லியன் கணக்கானோர் மிதமிஞ்சிய குளிராலும் இருளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

Exit mobile version