Site icon Tamil News

சூடான் நோக்கி பறந்த பிரித்தானிய துருப்புகள்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் பிரிட்டிஷ் நாட்டினரை வெளியேற்றுவதற்கு பிரிட்டிஷ் துருப்புக்களின் குழு கிழக்கு சூடானில் உள்ள துறைமுகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் செங்கடலில் உள்ள போர்ட் சூடானில் தரையிறங்கினர். சி-17 போக்குவரத்து விமானம் சூடான் திசையில் செல்வதை விமான கண்காணிப்பு இணையதளங்கள் காட்டியது.

சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு உதவுவதற்கு  சிறந்த வழிகள் என்ன என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வரப்படுகின்றது.

தலைநகர் கார்ட்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு 500 மைல்களுக்கும் அதிகமான பாதை நீண்டது மற்றும் கடினமானது. வைட்ஹால் ஆதாரங்களின்படி, ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பலான – HMS லான்காஸ்டர் – பிராந்தியத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version