Site icon Tamil News

ஜப்பானுக்கு எதிராக தென்கொரியாவில் தொடரும் போராட்டம்…

புகுஷிமா அணு உலை கதிரியக்க சுத்திகரிப்பு நீரை பசுபிக் பெருங்கடலில் வெளுயேற்றும் ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக தென்கொரியாவில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புகுஷிமா கதிரியக்க நீரை பசுபிக் கடலில் வெளியேற்றும் பணியை கடந்த மாதம் 24ம் திகதி ஜப்பான் தொடங்கியது.

முதல்கட்டமாக ஆகஸ்ட் 24 முதல் கடந்த 11ம் திகதி வரை, 7ஆயிரத்து 800டன் நீர் கடலில் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இம்மாதம் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானின் 2ம் கட்ட நீர் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த தென்கொரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியோலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் வலியுறுத்தினர். ஜப்பானின் செயலால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version