Site icon Tamil News

கொரோனாவால் சிரிக்க மறந்த ஜப்பானியர்கள் : ஒரு மணி நேரத்திற்கு 4550 ரூபாயை கொடுத்து சிரிக்க பயிற்சி எடுக்கும் மக்கள்!

கொரோனா பெரும் தொற்று உலகளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. பெருமளவிலான மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டே வாழ்வதற்கும் கற்றுக் கொண்டார்கள். அத்துடன் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜப்பானியர்கள் கொரோனா தொற்றுக்கு அஞ்சி மாஸ்க் அணிந்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 8 வீதமானோரே மாஸ்க் அணிவதை நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்த ஜப்பானிய மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம்.

இதனையடுத்து டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை எடுத்து வருகிறது. இந்த வகுப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு  4550 ரூபாயை செலுத்தி ஜப்பானிய மக்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு சிரிப்பின் முக்கியத்துவம் பற்றியும்,  எப்படி சிரிக்க வேண்டும் என்றும்,  ஹாலிவுட் ஸ்டைல் ஸ்மைலிங் நுட்பங்களை கற்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

கையில் கண்ணாடி ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிரிக்க பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version