Site icon Tamil News

மலேசியாவில் பாடசாலை ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர் – மாணவனுக்கு நேர்ந்த கதி

மலேசியா – கோலாலம்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மாணவரைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரிக்கப்படுவதாக மலேசியக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மீதான வன்முறை, கேலிப் பேச்சு, துன்புறுத்தல் என எந்தச் செயலுக்கும் கருணை காட்டப்படாது என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் (Fadhlina Sidek) தெரிவித்தார்.

அண்மையில் தமது 6 வயது மகனை ஆசிரியர் கடித்ததாக ஒரு சிறுவனின் அம்மா புகாரளித்திருந்தார். அந்தத் தகவல் சமூக ஊடகங்களில் பரவியதாக Astro Awani செய்தி கூறுகிறது.

சம்பவத்துக்குப் பிறகு மகன் பள்ளிக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை என்றும் விடுமுறை எப்போது வரும் என்று தம்மிடம் அடிக்கடி கேட்டதாகவும் அந்த அம்மா கூறியுள்ளார். மகனிடம் விசாரித்த பிறகே அந்தச் சம்பவம் குறித்துத் தமக்குத் தெரிய வந்ததாக அப்பெண் கூறினார்.

விசாரணைக்குப் போதிய அவகாசம் கொடுத்து அதன் முடிவுக்குக் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version