Site icon Tamil News

நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்திய தேர்தலில் வாக்களிக்க வந்த தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய்க்கு பிரச்சனை ஏற்பட்டது.

சென்னையில் உள்ள அவரது வாக்குச்சாவடிக்கு அவர் வந்தபோது, ​​அவரைப் பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும், பின்னர் பொலிசார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்காமல் விஜய் வாக்களிக்க வாய்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் மூலம் விஜய் சட்டவிரோதமாக வாக்களித்ததாக சென்னை பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்னவெனில், அவருடன் பெரும் கும்பல் ஒன்று சேர்ந்து வாக்குச்சாவடிக்குள் நுழைந்து மக்களை துன்புறுத்தியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது தொடர்பாக சென்னை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அன்று காலை தனது சமீபத்திய படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விஜய் ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version