Site icon Tamil News

( update) அமெரிக்காவில் இடிந்து விழுந்த பாலம் : 07 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல்!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய பாலத்தில் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் மோதியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டாலி என்ற கொள்கலன் கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பாலம் இடிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்படாத போதிலும், விபத்து காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளூர் அதிகாரிகளுக்கு தனது துறையின் ஆதரவை வழங்குவதாகக் கூறுகிறார்.

Exit mobile version