Site icon Tamil News

லண்டனில் நடந்த கோர சம்பவம்: பொது மக்களின் உதவியை நாடியுள்ள போலீசார்

தெற்கு லண்டனின் Clapham பகுதியில் நடந்த அமில வீச்சு சம்பவத்தில் ஒரு தாயாரும் இரு பிள்ளைகளும் உட்பட 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமில வீச்சு நடந்த Clapham பகுதிக்கு தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் மீது நடந்த தாக்குதல் இதுவென்றும், அவர்களுக்கு உதவச் சென்ற மூவரும் மூன்று பொலிசாரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சந்தேக நபரான அப்துல் ஷோக்கூர் எசெடியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இவரைக் கண்டால் 999 என்ற எண்ணுக்கு அழைக்கவும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version