Site icon Tamil News

கடலூரில் பட்டப்பகலில் 12ஆம் வகுப்பு மாணவர் குத்திக்கொலை!

தமிழக மாவட்டம் கடலூரில் 12ஆம் வகுப்பு மாணவர் பேருந்து நிலையத்திலேயே குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜீவா எனும் 12ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.அப்போது புளியங்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், மாணவன் ஜீவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பட்டப்பகலில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜீவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய கொலையாளி தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் பட்டப்பகலிலேயே பள்ளி மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version